அவசரகாலச் சட்டம் காலாவதியானது ?

கடந்த ஏப்ரல் 22ஆம் நாள் தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், நாடாளுமன்ற ஒப்புதலுடன், அவசரகாலச்சட்டத்தை, ஜனாதிபதி மாதம் தோறும் நீடிப்புச் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை 22ஆம் நாள் நீடிப்புச் செய்து வெளியிடப்பட்ட அவசரகாலச்சட்ட அரசிதழ் அறிவிப்பு நேற்றுடன் காலாவதியானது.
அவசரகாலச்சட்டத்தை நீடிப்புச் செய்வது தொடர்பான அரசிதழ் அறிவிப்பு எதையும் ஜனாதிபதி இதுவரை வெளியிடவில்லை. இதனால் அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
வரி நிவாரணங்களை மக்களுக்கு வழங்காத வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உ...
அனைத்து மாணவர்களும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் - பொதுசுகாதார பரிசோதகர் சங்கம்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை வவுனியா விஜயம் - வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பண நிகழ்வு நாளை!
|
|