அரிசி இறக்குமதிக்கான வரிச்சலுகை நீடிப்பு!

அரிசி இறக்குமதிக்கான வரிச்சலுகையை மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இந்த வரிச்சலுகையானது நேற்றைய தினத்துடன் (31) முடிவுக்குக் கொண்டுவரப்படவிருந்தது.
இதனூடாக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கு விசேட வர்த்தகப் பொருளுக்கான வரியாக 5 ரூபா மாத்திரமே அறிவிடப்பட்டது.
வரிச்சலுகைக்கு முன்னர் தீர்வை வரி உள்ளிட்ட பல வரிகள் உள்ளடக்கப்பட்டு ஒரு கிலோகிராம் அரிசிக்கு 50 ரூபா இறக்குமதி வரி அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் 340 மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!
வடமராட்சி கிழக்கை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்றா? - சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமத...
நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள் - மின் நெருக்கடி தொடர்பில் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்...
|
|