அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ள இரகசியம்!

Saturday, January 4th, 2020

கடந்த ஆட்சியின் போது சுகாதார துறையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் 11 நிறுவனங்களில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அதில் எந்தவொரு நிறுவனமும் அது தொடர்பில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: