அரச மற்றும் தனியார் அலுவலக நேரத்தில் மாற்றம் கொண்டுவர தீர்மானம் – ஜனாதிபதி கோட்டாபய!

அரச மற்றும் தனியார் பிரிவினருக்கான அலுவலக நேரத்தில் மாற்றத்தை கொண்டு வர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் அதேவேளையில், தனியார் பேருந்து நடவடிக்கையை முறையான வகையில் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
அந்தவகையில் வாகன நெருக்கடியை தடுப்பதற்காக அலுவலக நேரத்தை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி இந்த கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.
வாகன நெருக்கடியை தடுப்பதற்காகவும் பொது மக்களின் போக்குவரத்து நெருக்கடிகளை தடுப்பதற்காகவும் தனியார் மற்றும் அரச பிரிவுகளின் சேவைகளுக்கான நேரத்தை மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தனியார் பிரிவுக்கான பணி ஆரம்பிக்கும் நேரத்தை காலை 10 மணிக்கு மாற்ற ஜனாதிபதி ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
நீதிமன்ற மூலம் நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியம் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
பிரச்சினைகள் இருந்தால் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 915ஆக உயர்வு – தொற்றாளர்களில் 480 பேர் கடற்படை சிப்பாய்கள் ...
|
|