அரச பாடசாலைகளுக்கு இன்றுடன் 3 ஆம் தவணை விடுமுறை – பெப்ரவரி 20 மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுகிறது. 2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைகின்றது.
அதேவேளை க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாவதுடன் நாடு முழுவதுமுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
14 நாட்களுக்கு அதிகமான காலப்பகுதிவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதி மக்களுக்கு 6 மாத காலங்களுக்கு ம...
யாழில் சீரற்ற வானிலை காரணமாக 5,908 குடும்பங்கள் பாதிப்பு!
இலங்கைக்கு தென்கொரியா தொடர்ந்தும் ஒத்துழைப்புகளை வழங்கும் - இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் அறிவிப்பு...
|
|