அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் – விசாரணைகளை ஆரம்பதித்ததுர் குற்றப் புலனாய்வு திணைக்களம்!

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையவழி தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத்தின் பணிப்புரைக்கமைய இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட இணையவழி தாக்குதலால், அமைச்சரவை அலுவலகம் உட்பட பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் முடக்கப்பட்டிருந்தன.
இந்தநிலையில், குறித்த இணையவழி தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலஞ்சம் பெற்ற அதிபர்களை இடைநிறுத்த நடவடிக்கை !
இளைஞர்களின் வளர்ச்சியும் தீர்க்கமான சிந்தனையும் தான் எதிர் காலத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் - தோ...
நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை குறைப்பு!
|
|