அரச தொழில் அதிகாரிகள் சங்கம் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு!

தமது கோரிக்கைகள் பலவற்றுக்கு தீர்வு காணப்படாமையினால் அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் இன்று (02) முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமககே தெரிவித்துள்ளார்.
சேவை யாப்பு தயாரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடாத்தியும் தீர்வு கிட்டாததனால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஐ.சீ. கமககே தெரிவித்துள்ளார்.
முன்னர் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அதிகாரிகளின் வாக்குறுதியினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததனால் இன்று முதல் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கனிய எண்ணெய் தொடர்பில்ஆய்வு நடத்த உடன்படிக்கை!
மிக அவசர தேவையை தவிர ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் - ஜனாதிப...
இரு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளலாம் - சுற்றுலா அதிகார சபை அறிவிப்...
|
|
கூட்டமைப்பின் ஆளுமையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திருமலை உப்புவெளி பிரதேச சபையின் ஆட்சிப் பொறுப்பை ...
நாடு முழுமையாக முடக்கப்படாது - பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!
யாழ் மாநகர சபையின் சுகாதார சீரகேடான கழிவுகள் வேலணை பிரதேசத்தில் அனுமதியின்றி கொட்டப்பட்டதால் சர்ச்சை...