அரச சேவை முகாமைத்துவ ரீதியாக பலவீனமடைந்துள்ளது -அமைச்சர் ராஜித சேனாரத்ன!

நாட்டின் அரச சேவையானது முகாமைத்துவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களின் மனித வளத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றில் இன்று(14) கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் ராஜித இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரச நிறுவனங்கள் சுமார் ஒரு மாதங்களில் எடுக்கும் முடிவுகளையும் தீர்மானங்களையும் தனியார் நிறுவனங்கள் ஒரே நாளில் எடுக்கின்றன.
காலம் கடந்து போன அரச சேவை சட்ட திட்டங்களில் சிக்கியிருக்கும் ஊழியர்களை அதில் இருந்து அகற்றி வலுவான அரச சேவையை உருவாக்க தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
Related posts:
இலங்கையிடம் சிக்கா வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை!
அரச மொழித் தினத்தினைப் பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி!
எனது அமைச்சின் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வாறு செயற்பட்டுள்ளமை என்னையும் அசௌகரியத்துக...
|
|