அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை – அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் தகவல்!

அரச சார்பற்ற 38 அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ராஜா குணரத்ன, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், இந்த விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புக்களில், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் அடங்குவதாக அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
நாடு பூராகவும் பற்சிகிச்சைப் பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படும் - சுகாதார அமைச்சு!
கடும் வரட்சி: பாதிக்கப்பட்ட 1,35,000 குடும்பங்களுக்கு இம்மாதம் நிவாரணம்!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சபாநாயகர் தலைமையில் கூடியது நாடாளுமன்றம்!
|
|