அரச அலுவலகங்களில் பிரச்சாரத்திற்கு தடை – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயங்களுக்குள் ஜனாதிபதி வேட்பாளர்களின் விளம்பர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரச காரியலயங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர்களின் அனைத்து சுவரொட்டிகள், பாதாதை மற்றும் கட்அவுட்டுகளையும் வேட்புமனுத்தாக்கல் இடம்பெறும் 7 ஆம் திகதிக்குள் அகற்றப்பட வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
Related posts:
|
|