அரசியல் நெருக்கடிக்கு ஒருவாரத்தில் தீர்வு – ஜனாதிபதி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஷேட பிரதிநிதிகள் மாநாடு, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுகையில்;
“தான் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி எடுத்த தீர்மானம் நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற் கொண்டே ஆகும். ஐக்கிய தேசியக் கட்சியானது நாட்டை அழிவுப் பாதைக்கே இட்டுச் சென்றது. ரணில் விக்கிரமசிங்க நாட்டை மட்டுமின்றி தன்னையும் சில சந்தர்ப்பங்களில் அழித்தார் என்றே கூறவேண்டும். தற்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு தான் இன்னும் 07 நாட்களுள் தீர்வினை பெற்றுத் தருவேன்”என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
உலக வங்கியின் நிதிப்பங்களிப்பில் யாழ் - பொன்னாலை வீதி புனரமைப்பு!
வருகிறது வீதி ஒழுங்கு மீறல் அபராதத்துக்கான புதிய பட்டியல்!
மார்ச் 27 முதல் மீண்டும் மதுரை – கொழும்பு இடையே விமானசேவை - ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு!
|
|