அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு – வெளியேறி விமர்சிப்பதற்கு கதவுகள் திறந்தே இருப்பதாகவும் பிரதமர் தெரிவிப்பு!

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனால், அத்தகையவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு கதவுகள் திறந்தே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மேல் நோக்கி பார்த்து எச்சில் துப்புவதை போன்றது.
அதேபோல் ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் அரசியலுக்கு ஆயுள் குறைவு. நான் 50 வருடங்களாக அரசியலில் அனுபவங்களை பெற்றுள்ளேன்.
எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் கொள்கைகளில் இருந்து விலகிச் சென்றதில்லை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
00
Related posts:
ஒரே நேரத்தில் ஜனாதிபதி மற்றும் பொது தேர்தல் - அமைச்சர் ராஜித்த சேனாரத்ன!
வலுவான சாட்சி வேண்டும்: துருக்கி அரசிடம் அமெரிக்கா கோரிக்க!
பொலிஸாரிடம் சொல்லாதீர்கள் - மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!
|
|