அரசாங்கத்தின் நிதி முதன்மை கணக்கில் 21.9 பில்லியன் ரூபா மேலதிகம்!

அரசாங்கத்தின் நிதி முதன்மை கணக்கில் 63 வருடங்களின் பின்னர் மேலதிகமாக நிதி தொகை இருப்பதாக நிதி அமைச்சுதெரிவித்துள்ளது.
இவ்வாறு ஏற்படக் காரணம் அரசாங்கத்தின் வெற்றிகரமான வருமான செலவு முகாமைத்துவமே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய21.9 பில்லியன் ரூபா மேலதிகமாக பதிவாகியுள்ளது.
சுதந்திர இலங்கையில் முதன்முறையாக 1954 ஆம் ஆண்டிலேயே வரவுசெலவுத்திட்டத்தில் நிதி முதன்மை சுட்டிக்காட்டப்பட்டது.
இது மொத்த தேசிய உற்பத்தியில் 0.5 சதவீதமாகும். பின்னர் 1956ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 2.2 சதவீதமாக வரவுசெலவுத்திட்டத்தில் மேலதிகமாக காணப்பட்டதாகவும் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
யாழ்.குடாநாட்டு மக்களிற்கு பொலிஸாரின் அவசர செய்தி!
இலங்கைக்கு விஜயம் செய்யுங்கள் - உலக நாடுகளுக்கு மாலைதீவின் சபாநாயகர் அழைப்பு!
சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை!
|
|