அமரர் சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

அமரர் இராமசாமி ஐயா சிவஞானசுந்தர ஐயா அவர்களது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்டசியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை தெலுத்தரியுள்ளார்.
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு கனகரத்தினம் வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலிமரியாதையை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டார்.
இந்த அஞ்சலி செலுத்தலின் போது யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பூதவுடலுக்கு தமது அஞ்சலி மரயாதைகை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று முதல் வரவு செலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்பட்ட 362 பிரேரணைகள் அமுலாகின்றது!
ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் உரை!
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடளாவிய ரீதியில் மற்றுமொரு பரீட்சை வெற்றிகரமாக ஆரம்பம் - பரீட்சைக...
|
|