அமரர் அருணாசலம் சந்திரசேகரத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கரவெட்டி பிரதேசசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அருணாசலம் சந்திரசேகரத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் தமது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இன்றைய தினம் பாரதி வீதி. கம்பர்மலை, உடுப்பிட்டியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் அன்னாரது பூதவுடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயரற்றிருக்கம் குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்தனர்.
சில மாதகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அமரர் சந்திரசேகரம் நேற்றையதினம்(18) காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவி வித்தியாவின் தாயாருக்கு சந்தேக நபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தல் : மன்றில் தெரிவிப்பு!
முதலீட்டுத் துறையில் வடமாகாணம் மிகவும் முக்கியமானதொரு பிராந்தியம்:அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்!
நெடுந்தீவுச் சர்ச்சை தொடர்பில் சட்டமா அதிபரிடம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆலோசனை!
|
|