அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு!

சட்டவிரோத வெடிபொருட்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான குறித்த கால எல்லை இம்மாதம் 20ஆம் திகதி காலை 6.00 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்தக் காலப்பகுதியின் பின்னர் இவற்றைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடி பொருட்களை வைத்திருப்போர் தொடர்பில் பொலிசாருக்கு தகவல்களை வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையில் மூன்று நாட்களுக்குள் வழங்க முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யதார்த்த நிலைக்குட்பட்ட செயற்பாடுகளே மக்களுக்கு நன்மைகளை பெற்றுத்தரும் ஆற்றல் கொண்டது – தோழர் ஜீவன்!
தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும் - மாகாணசபைத் தேர்த...
கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வ...
|
|