அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இலங்கைக்கு செல்லவும் – தனது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்து!

அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது.
இலங்கையை கொரோனா தொற்றின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதாக நேற்று பிரித்தானியா அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே, பிரித்தானியர்கள் இலங்கைக்கு அத்தியாவசியக் காரணங்களுக்காக மட்டும் பயணிக்குமாறு பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாயச் செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
குறுகிய அறிவிப்பின் பேரில் இலங்கையில் பயணத்தடைகள், ஊரடங்கு சட்டம் என்பன ஏற்படுத்தப்படும் என்பதோடு, விமானப் பயணங்களிலும் மாற்றம் ஏற்படக்கூடும் எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரித்தானிய குப்பைகளை மஹாவலி இடத்தில் குவிக்க திட்டம்?
வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைத்திட்டம் - ஜனாதிபதி கோட்டாபய!
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தபால் முத்திரை ஊடகத்துறை அமைச்சரால் வெளியீடு!
|
|