அதிவேக நெடுஞ்சாலைகளில் லங்கா QR முறையின் ஊடாக கட்டண அறவிட அமைச்சரவை அனுமதி!

LANKA QR கட்டண முறையினூடாக அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
திரவப்பணப் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்தக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, இந்தக் கட்டணமுறை எதிர்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் உள்ள கட்டண அறவீட்டு நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கைப்பேசிகளில் குறித்த தொகையயை உள்ளிட்டு எந்தவொரு வங்கியினதும் LANKA QR செயலியின் ஊடாக, நுழைவாயிலில் காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து கட்டணத்தை செலுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண முறைமையை அமுலாக்குவதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீயினால் பலகோடி சொத்துகள் இழப்பு!
11 பேர் கடத்தல் - லெப்டினன்ட் கொமாண்டரை கைது செய்யுமாறு உத்தரவு!
40 ஏக்கர் சோளச் செய்கை கிளிநொச்சியில் அழிப்பு!
|
|