அதிவேக தபால் சேவை தீவுப் பகுதிக்கும் விரிவு!

யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் அதிவேக தபால் சேவைகள் தற்போது படிப்படியாக பரவலாக்கப்பட்டு வரும் நிலையில் தீவுப் பகுதிக்கும் இந்தச் சேவை நகர்த்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணத் தலைமைத் தபாலகம் தெரிவித்தது.
மக்களுக்கு துரிதமான சேவையை வழங்கும் நோக்கிலும் தபால்துறையின் எதிர்கால இருப்பைத் தக்கவைக்கும் நோக்கிலும் யாழ்ப்பாணத்தில் அதிவேக தபால் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதிவேக தபால் சேவைக்காக பல்வேறு தபாலகங்களுக்கு உந்துருளி வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தீவுப் பகுதிக்கும் இந்தத் துரித தபால் சேவை கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதற்காக வேலணை தபாலகத்துக்கு தபால் விநியோகத் தேவைக்கென உந்துருளி வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
கிளிநொச்சி பொது சந்தையில் பாரிய தீ !
வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஸ்ரீரங்கே...
வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது நீடிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|