அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!
Tuesday, November 22nd, 2016அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி. வடக்கின் தையிட்டி கிழக்குப் பகுதியில் பொது மக்களின் காணிகளிலிருந்து இரண்டு மிதிவெடிகளும், எறிகணை ஒன்றும் நேற்று மீட்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்ட தமது காணிகளைத் துப்பரவு செய்யும் போதே குறித்த வெடி பொருட்கள் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துக் குறித்த வெடி பொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுப் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

Related posts:
அபிவிருத்திக்கே முன்னுரிமை வழங்கப்படும் - ஜனாதிபதி!
புதிய கல்வியாண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் நாளையதினம் மீண்டும் ஆரம்பம் – கல்வ...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நடைபெறும் - தேர்தல்கள் ஆணையாளர...
|
|