அடுத்த மாதம்முதல் உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில அறிவிப்பு!

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம் பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கும் உர மானியம் வழங்கப்படவிருப்பதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்துள்ளார்
நெற் செய்கைக்குத் தேவையான உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. அத்துடன் மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களுக்குத் தேவையான உரம் விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக உர மாநியத்திற்காக அரசாங்கம் ஏழாயிரம் கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது என்றும் உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
எவருக்கும் நான் மண்டியிட மாட்டேன் - ஜனாதிபதி!
பாகிஸ்தானில் கோர விபத்து - 36 பேர் பலி!
இந்திய கடன் வசதியின் கீழான இறுதி எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்தது!
|
|