அடுத்த ஆண்டுக்கான ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடர் இரத்து!

அடுத்த வருடம் நடத்தப்படவிருந்த ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரை இரத்து செய்ய சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
முன்னணி அணிகள் தங்களுடைய இரு நாடுகளுக்கிடையேயான தொடரில் அதிக அளவில் விளையாட வேண்டியிருப்பதாலேயே இந்த சிக்கல் நிலைமை தோன்றியுள்ளதாக ஐ.சி.சி. விளக்கமளித்துள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு நடத்தப்படவிருந்த ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடரை 2020ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடர் நடத்தப்படும் இடம் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் ரி-ருவென்ரி உலகக்கிண்ண தொடர், இதுவரை தென்னாபிரிக்கா (2007), இங்கிலாந்து (2009), மேற்கிந்திய தீவுகள் (2010), இலங்கை (2012), பங்களாதேஷ் (2014), இந்தியா (2016) ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யூரோ கிண்ணம்: காலிறுதிக்கு முன்னெறியது ஜேர்மனி!
தனித்து விடப்பட்ட தீவக மக்களின் காப்பரணாக வந்தவர் யார்? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நிறைவேற்றம்!
|
|