22 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் -வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Saturday, March 9th, 2024

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு பின்னர் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை – யாழ் மாவட்டத்தில...
தரமான பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்யுங்கள் - ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தக அமைச்சர் கோரிக்கை!
தேர்தலுக்கு செலவிடும் பணத்தை மக்களது பட்டினியை போக்க செலவிடுங்கள் - சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் கோ...