விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் உழவர் சந்தை செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள நல்லூர் பிரதேச சபை

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட திருநெல்வேலி, கொக்குவில் ஆகிய பொதுச்சந்தைகளில் விவசாயிகளே தங்கள் விவசாய உற்பத்திப் பொருட்களை நேரடியாகச் சந்தைப்படுத்தும் வகையில் ‘உழவர் சந்தை’ எனும் செயற்திட்டத்தை நல்லூர் பிரதேசசபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயற்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து கோரப்பட்டுள்ளன. இது தொடர்பில் நல்லூர் பிரதேசசபையின் செயலாளர் ரி.சுதர்சன் தெரிவிக்கையில்,
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பொதுச் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வது மிகவும் குறைவு. இதன்காரணமாக உற்பத்தியாளர்களுக்கும், வியாபாரிகளுக்குமிடையில் காணப்படும் இடைத்தரகர்கள் மூலமாகவே விவசாய உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்த முடிகிறது.
சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் உற்பத்திப் பொருட்களுக்குக் கழிவு நடைமுறையை இல்லாமல் செய்வதற்கு நாங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும் அதனையும் மீறிக் கழிவு நடைமுறை மறைமுகமாக இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆகவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்களின் விவசாய உற்பத்திப் பொருட்களை நேரடியாகத் திருநெல்வேலிப் பொதுச் சந்தை மற்றும் கொக்குவில் பொதுச்சந்தை ஆகிய சந்தைகளில் விற்பனை செய்வதற்கேற்ற இட ஒதுக்கீட்டினை உழவர் சந்தை மூலமாக ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம் என்றார்.
இதேவேளை இந்தச் செயற்திட்டத்தில் இணைந்து பயன்பெற்றுக் கொள்ள விரும்பும் யாழ். மாவட்ட விவசாயிகள் நல்லூர் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயத்தில் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும்
Related posts:
|
|