வலிகாமம் பகுதியில் கடும் மழை

யாழ்.குடாநாட்டில் கடந்த பல நாட்களாகக் கடும் வெப்பமுடனான காலநிலை நீடித்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை(19-) பிற்பகல் வலிகாமத்தின் பல இடங்களிலும் கடுமையான மழை பெய்துள்ளது. மழை காரணமாகப் பொதுமக்களும் , விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வலிகாமம் தெற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளின் பல இடங்களிலும் இந்த மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
வலிகாமத்தின் சில இடங்களில் கடந்த வாரமும் மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
யாழ் குடாநாட்டில் வெயிலின் கொடுமையால் அண்மையில் வயோதிபரொருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தமையும், அடிக்கடி வெயில் காரணமாகப் பலரும் மயங்கி விழும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதுடன் பகல் வேளையை விட இரவு வேளைகளில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரட்சியின் தாக்கத்தினால் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அதிகளவில் பாதிப்பு!
முறைப்பாடு அளித்தால் லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சர...
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை - அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
|
|
பூஸ்டர் டோஸ் பெற்றவர்களுக்கே திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி திருவிழாவுக்கு அனுமதி : மன்னார் மாவட்ட...
நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் – பிரதமர் ரணில் விக...
நிர்மாணத் துறையில் ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக...