வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவு!

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 2 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 11.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 543.8 மில்லியன் ரூபாவை வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ் மாநகர முதல்வரது விடுமுறை தொடர்பில் குழறுபடி: விடுமுறைக் கடிதம் ஏற்றுக்கொள் முடியாது என யாழ் மாந...
நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு ...
வவுனியாவிலிருந்து 23 கிலோமீற்றர் தொலைவில் சிறு அளவிலான நில அதிர்வு!
|
|