வரட்சியான காலநிலையால் நீர்நிலைகளின் நீர்மட்டம் வீழ்ச்சி!

Saturday, February 17th, 2018

தற்போது மத்திய மலைநாட்டு பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது என மின்சக்திமற்றும் புத்தாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக காசல்ரீ, மவுசாக்கலை, கொத்மலை மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

மேலும் காசல்ரீ நீர்தேக்கம் பெருக்கெடுக்கும் மட்டத்தில் இருந்து 16 அடி வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: