யாழ்.மாவட்டச் செயலகத்தில் வருடத்தின் முதல் நாள் வேலையை ஆரம்பிக்கும் நிகழ்வு !

2017 ஆம் ஆண்டு நேற்று உதயமாகியுள்ள நிலையில் அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தமது வேலை நாளினை வரவேற்று ஆரம்பிக்கும் முதல்நாள் நிகழ்வு இன்று திங்கட்கிழமை(02) காலை யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் “பிறந்திருக்கும் இவ்வாண்டு இலங்கையில் வறுமையிலிருந்து மீட்கும் நிகழ்ச்சி திட்டத்திற்காக ஆளணியினர் அனைவரினதும் பங்களிப்பினை வழங்குவோம்” என இந்த நிகழ்வின் போது அரச அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதேவேளை, இவ்வாறான நிகழ்வு யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் அரச திணைக்களங்களிலும் நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுத்த வருடம்முதல் 3 தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம்!
இலங்கையில் 5 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா மரங்கள் – கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அனைத்து அர...
இன்று வழமை போன்று எரிபொருள் விநியோகம் - 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும் என...
|
|