யாழ். குடாநாட்டில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேத விபரங்கள் திரட்டப்படுகின்றது

யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களில் இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேத விபரங்கள் தொடர்பிலான தகவல்கள் விவசாயத் திணைக்களத்தால் அந்தந்த விவசாயப் போதனாசிரியர்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன.
யாழில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கடும் மழையும் பொழிந்த காரணத்தால் விவசாயிகளின் வாழை மற்றும் வெங்காயம் , கரட் , பீற்ரூட் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் , புகையிலைச் செய்கை என்பன பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன . இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்களே திரட்டப்பட்டு வருகின்றன.
Related posts:
பிரதிப் பொலிஸ் மாஅதிபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை!
முல்லைத்தீவில் இயற்கை வளங்கள் அழிப்பு : மக்கள் குற்றச்சாட்டு!
வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி – எச்சரிக்கிறார் சுகாதார பணிப்பாளர...
|
|