யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் பலி!

Tuesday, August 10th, 2021

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குருநகரைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், நாவற்குழியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த பெண் ஒருவருமாக மூவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தனர்.

அத்துடன், அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். மேலும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நாளை நள்ளிரவுக்கு முன்னர் தேர்தல் முடிவுகள் வெளியாகும் - மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!
டெல்டா வைரஸ் சமூகத்திற்குள் பரவியுளளது என்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை - சுகாதார மேம்பாட்ட...
இலங்கையில் தேசிய நெடுஞ்சாலைகள் அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மாவட்ட மட்டத்தில் மீளா...