மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” வட்டுக்கோட்டையில் திறப்பு!

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் “சுகம் பேணும் நிலையம்” வட்டுக்கோட்டை அத்தியடி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில், இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை மற்றும் வட்டுக்கோட்டை பிரதேச சமூகத்தினர் இணைந்து இந்த வைத்தியசாலையை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த வைத்தியசாலையை யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் திரு. சிறீ சற்குணராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக வைத்தியசாலையை திறந்துவைத்தார்.
குறித்த வைத்தியசாலையின் இலவச வைத்திய சேவைகளான நீரிழிவு பரிசோதனை, இரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட பல பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.
தினமும் காலை 7 மணி தொடக்கம் காலை 10 மணிவரை மற்றும் மாலை 4 மணி தொடக்கம் 7 மணிவரை, வைத்திய நிபுணர்கள் பலர் இணைந்து இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ளனர்.
இந்த வைத்தியசாலையின் சேவைகளில் வெளிநாடுகளில் வசிக்கும் வட்டுக்கோட்டையை சேர்ந்த உதவ முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|