முறிந்த மின்கம்பம் இன்னும் சீர்செய்யப்படவில்லை!

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் முறிந்து விழுந்த மின்சாரக் கம்பம், இன்னும் திருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.
குறித்த மின்கம்பத்தை வாகனமொன்று மோதிச் சென்றமையால், அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. எனினும் அது இதுவரை சீர் செய்யப்படாமல் இருப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதன் காரணமாக இவ்வீதி வழியாக செல்லும் மக்கள் மின்சாரத் தாக்கத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம் என்றும் மக்கள் அச்சமடைகின்றனர்.
Related posts:
வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு தூர இடம் செல்லும் கோணாவில், அறிவியல் நகர் மக...
பாவனையாளர்களை ஏமாற்றிய 95 வர்த்தகர்களுக்கு அபராதம்!
உத்தியோகபூர்வமாக பதவி விலகினார் கோட்டாபய ராஜபக்ச – புதிய பிரதமரை தெரிவுசெய்ய நாளையதினம் நாடாளுமன்றம்...
|
|