முன்னாள் இராணுவ வீரர்களின் கோரிக்கை குறித்து அவதானம்!
Tuesday, November 1st, 2016நியமிக்கப்பட்ட ஓய்வூதிய காலத்திற்கு முன்னதாக (12 வருடங்கள்) சேவையில் இருந்து விலகிய நிலையில், ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வரும் ஊனமுற்ற முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக, இலங்கை இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இராணுவத் தலைமையகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
பட்டத்தை வென்றது யாழ். கல்வி வலயம்!
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் தொடர்பில் தகவல்களை வழங்குங்கள்!
சீன தடுப்பூசி போடப்பட்ட எவருக்கும் இதுவரை எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை - இராஜாங்க அமைச்சர் ப...
|
|