மின்வெட்டுதொடர்பான நேர அட்டவணை வெளியானது !

இலங்கையில் 3 1/2 மணித்தியால மின்சார தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் பல பிரதேசங்களில் இன்று முதல் இந்த மின்சார விநியோகத்தடை அமுலுக்கு வருவதாகவும் மிசாரசபை மேலும் தெரிவித்துள்ளது..
இதன்படி காலை வேளையில் இரண்டரை மணித்தியாலங்களும் இரவில் ஒரு மணித்தியாலமும் மின்சார தடைப்படும். அதற்கமைய காலை 8 மணிமுதல் 10.30 வரைக்கும் இரவு வேளையில் 6 மணிமுதல் 10 மணிக்குள் ஒருமணித்தியாலமும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அறிவித்துள்ளது.
உரிய மழைவீழ்ச்சி இன்மையாலும், நுரைச்சோலை அனல்மின்சார நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை ஆகியவையே இதற்கான காரணங்கள் என மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்கள் வருகை அதிகரிப்பு!
திங்கள்முதல் மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து புகையிரத சேவைகள் ஆரம்பம் - நாளைமுதல் முற்பதிவுகளை மேற்...
இரண்டு அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!
|
|