மானிப்பாயில் 12 வீதிகள் அடுத்தாண்டு காப்பெற்றாகும்!

வலி.தென்மெற்கு மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட 12 வீதிகள் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியீட்டத்தில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் காப்பெற் வீதியாக சீரமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குழாய் – கல்வளை வீதி, பிரான்பற்று – பண்டத்தரிப்பு வீதி, அல்லுண்ணி வீதி, சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி – கம்மாவை வீதி, 1ஆம் 2ஆம் கயா வீதி, நவாலி தெற்கு ராஜராஜேஸ்வரி வீதி, மலைவேம்படி வீதி, சவாரி வீதி, மதவடி வீதி, செட்டியடைப்பு வீதி, சண்டிலிப்பாய் 5 கண்மதவடி வீதி, நாவாலி வடக்கு தலுவில் வீதி என்பனவே சீரமைக்கப்படவுள்ளன. வீதிகளின் சீரமைப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பணிப்பாளரின் மேற்பார்வையில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
முன்னாள் போராளிகள் என்பதால் புறக்கணிக்கப்படுகின்றோம்!
இலுப்பையடி சந்தியில் தேங்கும் மழைநீர் - பயணிப்போர் சிரமம்!
ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைகள் திருப்பியனுப்ப கூடாது - பிரதி...
|
|