மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி!

நீதிமன்றத்தின் பொறுப்பில் இருக்கும் அளுத்கமகேவின் கடவுச்சீட்டை தலா இரண்டு 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையின் கீழ் விடுவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேற்படி உத்தரவினை மின்னஞ்சல் மூலம் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும், குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்குமாறும் நீதிபதி பணித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்திற்காக 29 லட்சம் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கு காரணமாக நீதிமன்றம் மகிந்தானந்த அளுத்கமகேவின் கடவுச்சீட்டை முடக்கியுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியார் துறைக்கு 5 நாள் வேலை, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும்?
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப்?
சீனாவில் உள்ள "வெள்ளை குதிரை” விகாரை வளாகத்தின் இலங்கை விகாரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் மீண்...
|
|