போக்குவரத்து விதிகள் மீறலுக்கான தண்டனை அதிகரிப்பு நல்ல விடயம் – நியாயப்படுத்துகிறார் சுகாதார அமைச்சர் ராஜித!

போக்குவரத்து விதி மீறலுக்கான தண்டம் 25ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை மிகவும் நல்ல விடயம் என்ற சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போக்குவரத்தின் போது பிரதான 7விதிகள் மீறப்படுவதற்கான தண்டனை அதிகரிப்பு தொடர்பான யோசனையை முதலில் நானே முன்வைத்தேன். நாட்டில் இடம்பெறும் விபத்துக்களினால் ஆண்டுதோறும் சுமார் 25ஆயிரம் பேர்வரை உயிரிழப்பதுடன் பலர் காயமடைகின்றனர். இவர்கள் தொடர்பான செலவினங்களை சுகாதார அமைச்சே பொறுப்பேற்க வேண்டியிருக்கின்றது. சரியான சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி செலுத்தப்படுகின்ற தனியார் பஸ்களினால் பாரியளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
உதவிப் பணிப்பாளர்கள், ஆலோசகர்கள் 15 வருடங்களாக ஒரே வலையத்தில் என சுட்டிக்காட்டு!
நிறைவுக்கு வந்தது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அடையாள பணிப் பகிஷ்கரிப்பு!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!
|
|
தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளா் ஒருவருக்காக 523 ரூபா செலவு தோ்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான ...
ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு பாகிஸ்தான் அரச தலைவர் இம்ரான் கான் இலங்கை அரசுக்கு நன்றி த...
விரைவில் மாகாணசபை தேர்தல் - ஆளும் தரப்பு கட்சிகளின் தலைவர்களுடன் அவசர சந்திப்புக்கு ஜனாதிபதி ஏற்பாடு...