பொலிஸார் நால்வர் பணிநீக்கம்!

ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் காணாமல் போனமையால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்தை அடுத்து அண்மையில் குறித்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் பலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 9ஆம் திகதி பதகிரிய நெல் களஞ்சியசாலையில் இருந்து 80 மூட்டைகள் நெல்லினை திருடியமை தொடர்பிலேயே குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Related posts:
சத்திரசிகிச்சையின் போது கட்டில் உடைந்து வீழ்ந்ததால் மருத்துவருக்குக் காயம்!
அடையாள அட்டை விநியோகம் வழமைக்கு - ஆட்பதிவுத் திணைக்களம்!
புதிய சுகாதார வழிகாட்டல்களை மக்கள் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் - சுகாதார தரப்பினர் வலியுறுத்து!
|
|