பொலிஸாருக்கு நவீன ஊடகப் பரிணாமம் பெரும் சவால்- அமைச்சர் சாகல ரத்நாயக்க!

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் நவீன ஊடகமும், சமூக வலைத்தளப் பாவனையும் பொலிஸாருக்கு பெரும் சவாலை ஏற்பட்டிருப்பதாக சட்டம்,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சியை விடவும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் ஊடகங்களுக்கு பெருமளவில் சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மொணராகலை பொலிஸ் நிலையத்திற்கான நிர்வாகக் கட்டிடம் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து அங்கு உரையாற்றிய அமைச்சர், சமூக வலைத்தளங்கள் மற்றும் நவீன ஊடகங்களின் செயற்பாடுகளினால் பொலிஸ் துறையில் அதற்கு ஏற்றாற்போல் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா என்ற ஆயுதக் குழு தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் அமைச்சர் சாகல ரத்நாயக்க பதிலளிக்காமல் நழுவிச்சென்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
Related posts:
|
|