பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தேயிலை மற்றும் இறப்பர் சார் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயித்தே குறித்த வர்த்தமானி தொழில் அமைச்சரின் செயலாலரினால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானமானது, எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் செல்லுபடியாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாயாகவும் வரவு ௲ செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாயாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தில்ருக்ஷியின் இராஜினாமா குறித்த இறுதித் தீர்மானம் இன்று அறிவிப்பு!
வேட்பாளர்களின் விபரங்களை சபைகளில் பார்வையிடலாம்!
எமது வெற்றிக்கு பசில் ராஜபக்சவே காரணம் - ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த நினைப்போர்...
|
|