புகைவண்டி மோதியதில் பாடசாலை மாணவி பலி!

காலி, அம்பலாங்கொடை அருகேயுள்ள கரித்தகந்த பிரதேசத்தில் புகைவண்டியால் மோதுண்டு பாடசாலை மாணவியொருவர் பலியாகியுள்ள தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் நடைபெற்ற இந்த சம்பவத்தில். தனியார் வகுப்பொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயதான பாடசாலை மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டையில் இருந்து அம்பலாங்கொடை நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதமே குறித்த மாணவியை மோதியுள்ளது. .சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
யாழ்.சிறையிலுள்ள அரசியல் கைதிகளுக்கு பண்டிகைப் பொருட்கள்!
விமான நிலைய பிரமுகர் பிரிவில் தொடரும் சட்டவிரோத செயற்பாடுகள் - இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சித் தகவல்.....
தற்போதுள்ள மக்களுக்கு அடுத்த 25 வருடங்களில் நாடு எப்படி இருக்கும் என்பது தேவையில்லை - நாடாளுமன்ற உறு...
|
|