பிராந்திய வானொலி நிலையங்களை மூடும் என்ற அரசின் தீர்மானம் ஒத்திவைப்பு!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள பிராந்திய வானொலி நிலையங்களை இம்மாத இறுதியுடன் மூடுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருந்த தீர்மானம் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.
பிராந்திய வானொலி நிலையங்கள் பல , சமூக ,கலை கலாசார விடயங்களுடன் தொடர்புபட்டுள்ளதாலும் ,அவை வருமானத்தை ஈட்டித்தரும் நிலையங்களாக இருப்பதாலும் உடனடியாக மூடாமல் ,அவற்றை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
கிழக்கு மாகாணத்தில் பிறை எவ்.எம்., வடக்கின் யாழ் எவ்.எம் உட்பட்ட பல பிராந்திய வானொலி நிலையங்கள் இம்மாத இறுதியுடன் சேவைகளை நிறுத்தவிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஈ.பி.டி.பி துரித நடவடிக்கை - நயினாதீவின் உள்ளக பேருந்துப் போக்குவரத்து வேவை வழமைக்கு திரும்பியது!
மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத...
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டம் - விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்!
|
|