பணம்கேட்டுத் தர மறுத்தமையால் தாய், தந்தையரைக் கடுமையாகத் தாக்கிய தனயன்!

ஒரு இலட்சம் ரூபா பணம் கேட்டுத் தர மறுத்தமையால் ஆத்திரமடைந்த மகன் தாய், தந்தையரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இச் சம்பவம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி மகன் தந்தையிடம் பணம் தருமாறு கேட்டுள்ளார். குடும்பச் சூழ்நிலை காரணமாகத் தந்தை பணம் தர மறுத்துள்ளார். இதனையடுத்தே ஆத்திரமுற்ற மகன் தாய் தந்தையைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். .
குறித்த தாக்குதலையடுத்து இன்னொரு மகன் யாழ்.பொலிஸாரிற்குத் தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்துப் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்குச் சென்றுள்ளனர். எனினும் தனது மகன் மீது முறைப்பாடு செய்யத் தாயார் மறுத்துள்ளார். இதன் காரணமாக மகனைக் கைது செய்ய முடியாமல் பொலிஸார் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் .
Related posts:
சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று!
23 உள்ளுராட்சி சபைகளினது பதவிகாலம் நிறைவடைகின்றது!
யாழ்.குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றுக்கு நீதிபதி பிரேமசங்கர் நியமனம்!
|
|
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு - தேர்தல்கள் ஆண...
இவ்வருடம் ஏற்பட்ட விபத்துக்களால் கிளிநொச்சியில் 42 பேர் பலி - வீதி நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்க...
கடதாசி தட்டுப்பாடு - ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் முறைப்படுத்த முடிவு - போக்குவரத்து அமைச்சர் தி...