நெற்செய்கை அழிவால் விவசாயிகள் பாதிப்பு!

வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச கமநல சேவைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நெற் செய்கையில் 67 வீதம் அழிவடைந்துள்ளது.
இவ்வாறு அழிவடைந்த நெற் செய்கைக்கு மீள்நடுகை செய்வதற்கும் போதிய நெற் பயிர் இன்மை காரணமாக விவசாயிகளுக்குப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதனால் நவாலி, ஆனைக்கோட்டை, கட்டுடை, பண்டத்தரிப்பு மற்றும் இந்த பிரதேச விவசாயிகள் பெருநஸ்டம் அடைந்துள்ளனர்.
பெரும்போக நெற் செய்கைக்கு நிலம் உழுது, பண்படுத்தி, விதை நெல் கொள்வனவு தொடக்கம் களைநாசினிக்கு மருந்துகள் தெளித்த நிலையில் விவசாயிகள் பெருநஸ்டம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
5 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!
பட்டமளிப்பு விழாவில் உள்ளீர்க்கப்படாத 26பேரை உள்ளீர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
இன்றும் நாளையும் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்ட...
|
|