நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் முதியோருக்கான கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளுக்கான அறிவுறுத்தல்!

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் முதியோருக்கான கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளுக்கு அக் கொடுப்பனவு தொடர்பான அறிவுறுத்தலைப் பிரதேச செயலகம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒவ்வொரு மாதமும் 1900 ரூபா வழங்கப்படும். இக் கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் தபாலகங்கள் அல்லது உப தபாலகங்களினால் வழங்கப்படும்.
ஆகஸ்ட் மாதம் முதல் குறித்தவொரு மாதத்தில் உரிய திகதியில் கொடுப்பனவைப் பெறத் தவறினால் உரிய பயனாளிக்குக் கொடுப்பனவு நிரந்தரமாக நிறுத்தப்படும்.
சுகயீனம் அல்லது வேறு காரணங்களினால் குறித்த திகதியில் பயனாளி பணம் பெறுவதற்குச் செல்ல முடியாத நிலையிருப்பின் கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன் வேறொருவர் சென்று கொடுப்பனவைப் பெற முடியும் என அந்த அறிவுறுத்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
நேற்றுமுதல் அதிகாலை முதல் ஐரோப்பிய நேரங்கள் ஒரு மணியால் அதிகரிப்பு!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நடைமுறையால் இலங்கை பொதுப் போக்குவரத்து துறைக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன...
கையிருப்பில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு நாணயம்: 15,000 இலிருந்து 10,000 டொலராக குறைப்பு - வைப்பி...
|
|