தென்மராட்சியில் டெங்கு நோய் கட்டுப்பாட்டில்!

தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த வருட ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருட ஜனவரி மாதம் டெங்குவால் தாக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதென சாவகச்சேரி சுகாதார திணைக்களப்புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .
கடந்த வருடம் ஜனவரி மாதம் 92 பேர் டெங்குவால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த வருடம் சுகாதாரத் திணைக்களத்தினர் நடுவண் சுகாதாரத் திணைக்களம் மாகாண சுகாதார திணைக்களம், தென்மராட்சி பிரதேச செயலகம் ஆகயவற்றின் பணிப்புரையின் பேரில் பல தடவைகள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கிராம அலுவலர் பிரிவுகளில் மேற்கொண்டனர் எனவும் இதனால் டெங்குவின் தாக்கம் குறைவடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த வருடம் பிரதேசத்தில் 685 பேரே டெங்குவால் பீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மனிதாபிமான செயலுக்கு படையினர் பாராட்டு!
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தமைக்கு பிரதமரே பொறுப்புக்கூற வேண்டும்
வறிய நாடுகளின் தரவரிசையில் இலங்கை 36வது இடத்தில்!
|
|