தென்கொரியாவிற்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தொழில் வாய்ப்பிற்காக தென்கொரியாவிற்கு செல்லும் இலங்கை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்கொரியாவிற்கு சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தென்கொரிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்கொரியாவில் தற்சமயம் தொழில் புரியும் இலங்கையர்களுக்கான மேலதிக வசதிகள் பல செய்து கொடுப்பதற்கு தென்கொரிய வெளிநாட்டமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார். தற்சமயம் 42,000 இலங்கைப் பணியாளர்கள் தென்கொரியாவில் பணிபுரிவதாகவும் வெளிநாட்டமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
Related posts:
வடமாகாணம் தென்னிந்திய மாநிலங்களுடன் முதலீட்டுத் தொடர்புகளை அதிகரிப்பது நன்மை பயக்கும் : மத்திய வங்க...
80 இலட்சம் பெறுமதியான புகையிலைத் தூள் சுங்கப் பிரிவிடம் சிக்கியது!
கொவிட் தொற்றால் மரணித்த 91%மானோர் எவ்வித தடுப்பூசியையும் பெறாதோர் - தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவி...
|
|