தனியார் துறைக்கு 5 நாள் வேலை, சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாகும்?

தனியார்துறை ஊழியர்களுக்கு வாராந்தம் 5 நாட்கள் (45 மணித்தியாலங்கள்) வேலை முறையொன்றை செயற்படுத்துவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது.
அதன் பிரகாரம் தனியார் துறை ஊழியர்கள் வாரத்தின் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் (45 மணித்தியாலங்கள்) மாத்திரம் வேலை செய்வதற்கும் சனி மற்றும் ஞாயிறு தினங்களை அவர்களுக்கு விடுமுறைத் தினங்களாக்குவதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை – அரச ஊழியர்களின் தற்போதைய வராந்த 5 நாட்கள் (40 மணித்தியாலங்கள்) வேலை முறை தொடர்ந்து செயற்பாட்டில் இருக்கும். அத்துடன், ஒப்பந்த வேலைகளுக்காக தற்சமயம் வழங்கப்படும் 6மாத கால எல்லையை ஒரு வருடமாக நீடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.
Related posts:
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - வளிமண்டலவியல் திணைக்களம்!
மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் -ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!
தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - பாதுகாப்பு அமைச்சு அறி...
|
|