டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

ரூபாவை ஒப்பிடும் போது டொலரின் பெறுமதி கடந்த நாட்களில் மீண்டும் அதிரித்துள்ளது. நேற்று வரையில் டொலரின் கொள்முதல் விலை 144 ரூபாய் 66 சதமாக பதிவாகியுள்ளது. டொலரின் விற்பனை விலை 148 ரூபாய் 46 சதமாக பதிவாகியிருந்தன.
நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நிலைமை மற்றும் மத்திய வங்கியின் செயற்பாடு இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர் அசந்த சிறிமான தெரிவித்துள்ளர்.
ரூபா பலவீனமடைந்தால் இலங்கையின் ஏற்றுமதி அதிகரிக்கும் என தோன்றுகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அது தற்காலிக நிலைமையாகும்.
இதனால் மக்களின் ஊதியங்களின் உண்மையான மதிப்பு இல்லாமல் போகும். அதன் பின்னர் பணவீக்கம் அதிகரிக்கும். அதனை தொடர்ந்து மக்கள் அதிக சம்பளம் கோரி மீண்டும் இறங்கும் நிலைமை ஏற்படும் என கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்கை அடைய முற்படும் போதும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படும் என பொருளாதார ஆய்வாளர் அசந்த சிறிமான மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|