கொழும்புக்குக் கடத்தப்படவிருந்த இரண்டு இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குக் கடத்தப்படவிருந்த இரண்டு இலட்சம் பெறுமதியான ஒரு கிலோ 990 கிராம் இந்திய கேரளகஞ்சாப் பொதிகளுடன்நேற்றுச் (05) யாழ்.மடத்தடியினைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்.பொலிஸார் தெரிவிக்கின்றனர்..
யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ். முடவர் சந்திக்கு அண்மையில் வைத்துக் குறித்த நபர் கஞ்சாப் பொதிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணையின் பின் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related posts:
கொள்ளையில் ஈடுபடும் பெண் தொடர்பாக பொலிஸ் எச்சரிக்கை..!!
மலையக அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சிச் செய்தி!
மகத்தான கண்டுபிடிப்பு!
|
|